- திருப்பலுக்கன்ரம்
- திருக்கழுக்குன்றம்
- புதுப்பட்டினம் ஊராட்சி
- புதுப்பட்டினம் வியாபாரிகள் சங்கம்
- பொங்கல்
- புதுப்பட்டினம்
- ஜனாதிபதி
- காதர்
திருக்கழுக்குன்றம்: திருக்கழுக்குன்றம் ஒன்றியம் புதுப்பட்டினம் ஊராட்சியில் பணியாற்றும் தூய்மை பணியாளர்களுக்கு, புதுப்பட்டினம் வணிகர் சங்கம் சார்பில், ஆண்டுதோறும் பொங்கல் விழாவையொட்டி பரிசளிப்பு வழங்குவது வழக்கம். அதேப்போல் இந்தாண்டு இவ்விழா புதுப்பட்டினத்தில் நேற்று நடந்தது. விழாவிற்கு புதுப்பட்டினம் வணிகர் சங்க தலைவர் காதர் உசேன் தலைமை தாங்கினார். வணிகர் சங்க செயலாளர் சாரங்கபாணி, துணைத் தலைவர் செல்வம், துணை செயலாளர் இரவி, பொருளாளர் சீனிவாசன் மற்றும் நிர்வாகிகள் ஜாகிர் உசேன், காதர் முகைதீன், மன்சூர், சலாலுதீன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
விழாவில், சிறப்பு அழைப்பாளர்களாக கலந்துக் கொண்ட வணிகர் சங்கத்தின் மாவட்ட தலைவர் பிரபாகரன், மாநில துணை செயலாளர் அப்துல் சமது, மாநில தகவல் தொழில்நுட்ப துணை செயலாளர் சீனிவாசன் ஆகியோர் புதுப்பட்டினம் ஊராட்சியில் பணிபுரியும் தூய்மை பணியாளர்கள் உட்பட 100க்கும் மேற்பட்டோருக்கு புத்தாடை மற்றும் அரிசி உட்பட பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கினர்.
The post தூய்மை பணியாளர்களுக்கு பரிசு appeared first on Dinakaran.